பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகேவின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும் பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது.
இதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments