Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிரதமரையே பதவி விலக கோரும் போராட்டக்காரர்கள்


கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில் போராட்டக்காரர்கள் பிரதமரிடம் 5 அம்ச கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

போராட்டகாரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு..

01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.

02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.

03. அத்தியாவசிய சேவைகள் நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை...) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.

04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 

ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

05. 06 மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.

இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட தயாராக இல்லை. என பதிலளித்துள்ளனர். 

No comments