Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எம்.பி மாருக்கு 121 ரூபாய்க்கு எரிபொருள் ?


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் 121 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக, நாரஹேன்பிட்டி எரிபொருள் விநியோக இயந்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசலுக்கு வரிசையில் நிற்காமல் பொலிஸ் போக்குவரத்து எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்புவதற்கு பொலிஸ் மா அதிபர் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.  

அந்நிலையில், நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் 121 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியானதை அடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வெளியான செய்தியினை மறுத்துள்ள  மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை எனவும் , தற்போதுள்ள விலைக்கே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், பொலிஸ் போக்குவரத்து பிரிவில் உள்ள இயந்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டணங்கள் குறித்து விசாரணையை நடாத்துமாறு CPC இற்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். என்பதோடு, இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளேன். அம்பியுலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எவருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகைகள் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார். 

No comments