Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அமுலில் உள்ள ஊரடங்கு புதன் காலை 7 மணி வரை நீடிப்பு!


நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் புதன்கிழமை காலை 7 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் பதிவாகி வரும் வன்முறை சம்பவங்களை அடுத்து தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வன்முறை சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருப்பதனால் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை மஹிந்த ராஜபக்சேவின் வீடுகள் உட்பட மஹிந்த ஆதரவு அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள்  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments