பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகல் இல்லம் மற்றும் ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு என்பன உட்பட அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ , செஹான் சேமசிங்க, பந்துல குணவர்தன, காஞ்சனா விஜயசேகர மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டு தீயும் வைக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான கனக ஹேரத் , திஸ்ஸ குட்டியாராச்சி ,அருந்திக பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே மற்றும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதி மஹீபால ஹேரத் ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டையில் உள்ள டி.ஆர் ராஜபக்சே நூதன சாலையும் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பண்டாரவளை , குருநாகல் உள்ளூராட்சி சபை தலைவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் , வீரகெடிய பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு தீ வைப்பதற்காக வந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் , 08 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் அவசர கால சட்டம் , ஊரடங்கு சட்டம் என்பன அமுலில் உள்ள நிலையிலையே குறித்த சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
No comments