Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வன்முறையில் ஈடுபட்ட 90பேரும் , வன்முறையை தூண்டிய 100 பேரும் இதுவரையில் கைது!


நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 பேர் நீர்கொழும்பிலும், 17 பேர் பொலன்னறுவையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதே சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும், அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்டிய குற்றச்சாட்டில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments