பாட்டியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பேரனை முள்ளியவளை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து , பேரனை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டம் , முள்ளியவளை பகுதியில் வசிக்கும் 67 வயதான மூதாட்டியின் , பேர்த்தியின் கணவனான 38 வயதான குடும்பஸ்தர் கடந்த 7ஆம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு சென்று , பாட்டிக்கு சாராயத்தை பலவந்தமாக பருக்கி துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பாட்டியினால் மறுநாள் 08ஆம் திகதி முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை அடுத்து பொலிஸாரினால் பாட்டி முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நேற்றைய தினம் மாங்குளம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
No comments