யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொட்டடி நாவாந்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் நவரட்ணராஜா சங்கீத் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments