கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்ற இருந்த மாணவி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த வெடி விபத்தில் மாணவியின் ஒரு கால் கணுக்காலுக்கு கீழ் கடுமையான காயங்களுக்கு உள்ளானமையால் மாணவி கணுக்காலுக்கு கீழ் காலை இழந்துள்ளார்.
பளை கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணியை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தனது தாயாருடன் இணைந்து துப்பரவு செய்த வேளை காணிக்குள் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்து சிதறியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments