Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஜூன் முதலாம் திகதி முதல் தடையின்றிய மின்சாரம்


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் தடையின்றிய 24 மணி நேர மின்சாரம் வழங்குவதற்கு எதிர்பார்த்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

மின்சார உற்பத்திக்காக முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதேவேளை நுரைச்சேலை அனல் மின் நிலையத்தின் திருத்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் , நாளை முதல் தேசிய மின் இணைப்பில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் நீர் தேக்கங்களில் போதிய நீர் உள்ளமையால் , நீர் மின் உற்பத்தியும் அடுத்த வாரத்தில் தேசிய மின்னிணைப்பில் இணைக்க எதிர்பார்க்கிறோம். 

இவற்றின் மூலம் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் , தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என நம்புகின்றோம். 

இதேவேளை மின் தடை காரணமாக பல தனியார் தமக்கான மின் உற்பத்திக்காக பெருமளவான எரிபொருளை சேமித்து வைத்துள்ளனர். 

இவற்றினாலையே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது. போக்குவரத்து தேவைகளுக்காக மாத்திரமான எரிபொருள் தாராளமாக கிடைக்க கூடியவகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளமையால் , மிக விரைவில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிட்டும் என தெரிவித்தார். 


No comments