Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மனைவியையும் மைத்துனனையும் படுகொலை செய்தவருக்கு பொலிஸ் காவலில் சிகிச்சை


நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் ஆவர்.

சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments