சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் வீடொன்றில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வீட்டில் விசேடமாக உருவாக்கப்பட்ட பெரியளவிலான டீசல் குதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து 1,700 லீற்றர் டீசல் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments