இலங்கையில் கடந்த மே 30 முதல் நேற்றைய தினம் ஜூன் 29ஆம் திகதி வரையிலான ஒரு மாத கால பகுதியில் 20 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டள்ளனர்.
மொரட்டுவை – கட்டுபெத்த பகுதியில், கட்டுபெத்த – பிலியந்தலை வீதியின் பண்டாரநாயக்க மாவத்தை நடைபாதை முன்பாக நேற்று (29) பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர், ரீ 56 ரக துப்பாக்கி கொண்டு துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாணந்துறை பகுதியைச் சேர்ந்த இருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சிகள் அருகிலிருந்த சிசிரிவி கண்கானிப்பு கமெரா ஒன்றில் பதிவாகியுள்ள நிலையில், பாணந்துறையை மையப்படுத்திய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும், தற்போது துபாயில் மறைந்து வாழ்வதாக சந்தேகிக்கப்படும் ‘ குடு சலிந்து’ எனும் பாதாள உலக கும்பல் தலைவன் துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸாரும், கல்கிஸை வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments