தென்மேற்கு நைஜீரியாவின் ஒண்டோ மாகணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்து கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடி குண்டு தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்ட ஒண்டோ மாநில ஆளுநர் அரகுன்ரின் ஒலுவரோதிமி அகெரெடோலு, இந்த சம்பவத்தை “ஒரு பெரிய படுகொலை” என்றும், இதுபோன்று மீண்டும் நடக்க அனுமதிக்கப்படக் கூடாது”, என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் மற்றும் இதற்கான நோக்கம் தெரியாத நிலையில்,இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
No comments