வீட்டுக்குள் இரகசியமாக புகுந்து இரவு நேரங்களில் தனது 14 வயது காதலியின் தகாத உறவை பேணிவந்த காதலன் நித்திரைக் கொண்டதால் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று கொட்டகதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமியின் பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில், சிறுமி, தனது அண்ணன் குடும்பத்துடன் அவர்களது வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமியின் காதலன் பல சந்தர்ப்பங்களில் சிறுமியின் அண்ணன் - அண்ணிக்குத் தெரியாமல் இரகசியமாக நள்ளிரவு நேரங்களில் வீட்டில் புகுந்து தனது காதலியுடன் சல்லாபம் செய்து வந்ததுடன், அவர்கள் விழித்துக் கொள்வதற்கு முன்னர் அதிகாலை வீட்டை விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று காதலியின் வீட்டுக்கு வந்த காதலன் அதிகாலையே தண்டி, காதலனும் காதலியும் அசந்து தூக்கியமையால், அவர்கள் இருவரும் அண்ணன் குடும்பத்திடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர்.
இதனையடுத்து காதலனை சிறுமியின் அண்ணன் கொட்டகதெனிய பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் காதலனை கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments