மகனின் தாக்குதலில் இருந்து மருமகளை காப்பாற்ற முனைந்த தந்தை, மகனின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பகுதியை சேர்ந்த 66 வயதுடையவரே மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நிறை மது போதையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த மகன் தனது மனைவியை தாக்கியுள்ளார். மகனின் தாக்குதலில் இருந்து தனது மருமகளை தந்தை காப்பாற்ற முற்பட்ட வேளை மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments