தனக்கு உணவு பரிமாறாமல் நீண்ட நேரமாக தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தமையால் மனைவியை கோடாரியால் அடித்துக்கொன்றேன் என கணவன் பொலிஸாரிடம் தெரிவித்து, சரணடைந்துள்ளார்.
நுவரெலியா பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் , இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் சத்தியவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
மனைவியிடம் எனக்கு உணவு எடுத்துவருமாறு கூறி நீண்ட நேரம் காத்திருந்த போதும் மனைவி உணவு எடுத்து வராமல் தொலைபேசியில் யாருடனோ நீண்ட நேரமாக உரையாடிக்கொண்டு இருந்தார். அதனால் நான் , கோபமுற்று மனைவியுடன் வாக்குவாதப்பட்ட போது , மனைவி என்னை தாக்கி தள்ளி விட்டார். அதானல் கடும் கோபம் ஏற்பட்டு அருகில் இருந்த கோடரியால் மனைவியை தாக்கினேன். கோடரியால் தாக்கியதால் கடுமையாக இரத்தம் வெளியேறி அவர் அவ்விடத்திலையே உயிரிழந்துவிட்டார் என கணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்./
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments