யாழ்.கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியில் தனது தயாரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொடிகாமத்தை சேர்ந்த நி.தனுசன் (வயது 21) என்ற குடும்பஸ்த்தர் மீதே கடந்த செவ்வாய் கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கெற்பேலி பகுதியில் இருந்து கொடிகாமத்திலுள்ள தனது தாயாருடைய வீட்டுக்கு சென்ற போது, தவசிக்குளம் பகுதியில் வைத்து குறித்த குடும்பஸ்த்தர் மீது இனந்தொியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர்,சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments