Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் புனரமைக்கப்பட்டு பூங்காக்கள் , குளங்கள் திறப்பு!


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில் உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளம் என்பன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பாசையூர் பூங்கா, இராசாவின் தோட்ட வீதி பூங்கா, மடத்தடி பூங்கா என்பன நிர்மாணிக்கப்பட்டதுடன் சென்ஜோன் பொஸ்கோ அருகிலுள்ள பிள்ளையார் குளமும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் டி.பி.எஸ்.கே.திசாநாயக்க, யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது 





No comments