யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
வடமராட்சி மண்டான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவன் உள்ளிட்ட இருவர் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானார்கள்.
அதில் மாணவன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேவேளை வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் கன்ரர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
No comments