Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விலையை கூட்டி விற்போருக்கு எதிராக நடவடிக்கை


யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்,

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில்  வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில்  பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும். 

சில்லறை விற்பனையாளர்களும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அரிசியை  அதிக விலைக்கு விற்று பாவனையாளர்களை அதிக கஷ்டத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என  கேட்டுக் கொள்கின்றோம். 

அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக  காணப்படுகின்றது. அதே நேரத்தில் எதிர்காலங்களில் யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரின்  கண்காணிப்பின் மூலம் கட்டுப்பாடுவிலையினை  மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

 எனவே பொதுமக்களுக்கு கஷ்டம்  ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்

No comments