மன்னாரில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , உயிரிழந்தவர்களின் மற்றுமொரு சகோதரன், தந்தை உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நெச்சிக்குளம் பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியில் இரு குழுக்களுக்கு இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது .
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதில் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் மீது மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் தந்தை , சகோதரன் உள்ளிட்ட நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments