Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடபிராந்தியத்தில் இ.போ.ச பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை.


வடபிராந்தியத்தில் இன்று (27) அதிகாலை வரை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை.

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெற்றோல் வழங்கப்பட வேண்டும், அது வழங்கப்படாத பட்சத்தில் இன்று முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்துசபை வடபிராந்திய தொழிற்சங்கங்கள் நேற்று அறிவித்திருந்தன.

இதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச ஊழியர்களிற்கு பெற்றோல் இன்று வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். வடக்கின் ஏனைய இ.போ.ச ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வடக்கு ஆளுனர் தெரிவித்திருந்தார்.

எனினும், இன்று கடமைக்கு சமூகமளிக்க எரிபொருள் இல்லையென தெரிவித்து, ஊழியர்கள் வடக்கிலுள்ள இ.போ.ச சாலைகளின் போக்குவரத்து சேவையை இதுவரை ஆரம்பிக்கவில்லை. வழக்கமாக அதிகாலையில் இடம்பெறும் சேவைகளும் இடம்பெறவில்லை. ஆனாலும் ஒரு சில பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோல் இன்று கிடைத்தால் இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments