Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

"கோட்டோ கோ கம" படையினரின் முற்றுகைக்குள் - போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல்!


காலி முகத்திடலில் அமைந்துள்ள "கோட்டா கோ கம" பகுதி பொலிஸ் விசேட அதிரடி படையினர் , கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் முற்றுகைக்குள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நள்ளிரவு நேரம் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் போராட்டக்காரர்களை முற்றுகையிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதனால் அங்கு பதட்டமான சூழ் நிலை காணப்படுகிறது. 

அதேவேளை போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் , ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் காலி முகத்திடலில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சில ஊடக நிறுவனங்களின் நேரலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. அவற்றுக்கான காரணங்களை சுயாதீனமாக உறுதிப்படுத்தி அறிய முடியவில்லை.  

போராட்டக்காரர்களின் கொட்டகைகளை இராணுவத்தினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். 








No comments