வெல்லாவெளி பகுதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை காட்டு யானை சேதமாக்கியுள்ளது.
இதனால் பல மோட்டார் சைக்கிள்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.
இன்றைய தினம் காலை எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் இரவு எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் வரிசையில் அடுக்கி வைத்தனர்.
இந்நிலையில் இரவு காட்டு யானை அவ்விடத்திற்கு வந்து வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்களுக்கு சேதங்களை விளைவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.
No comments