கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது சகோதரி படுகாயமடைந்துள்ளார்.
உடபுஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவரும் மோதுண்டுள்ளனர். அதனை அடுத்து இருவரையும் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போது , அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றையவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
No comments