Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை படுகொலை செய்த தாயும் மகனும்


மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை , தாயும் மகனும் இணைத்து மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்து , காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பதுளை கஹட்டருப்ப பகுதியை சேர்ந்த 51 வயதான குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் அவரது 33 வயதான மனைவியும் , 17 வயதான மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி தனது கணவனை காணவில்லை என மனைவியும் அவரது மகனும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், ஜூன் மாதம் 16ஆம் திகதி அவர்களது வீட்டில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் இருந்து , மிருகங்களால் கடித்து சேதமாக்கப்பட்டு மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது. 

சடலத்தின் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

அதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , உயிரிழந்தவரின் மனைவியையும் , மகனையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது , . தனது மகனின் காதலுக்கு கணவன் எதிர்ப்பு தெரிவித்து , மகனை அடித்து துன்புறுத்தியதால் கடந்த மே மாதம் 31ஆம் திகதி இரவு கணவன் தூக்கிக்கொண்டு இருந்த வேளை மகனும் நானும் இணைந்து மண் வெட்டியால் கணவனை தாக்கி கொலை செய்த பின்னர் , சடலத்தை அன்று இரவே வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள காட்டில் வீசி விட்டு , மறுநாள் ஜூன் 1ஆம் திகதி கணவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன் என படுகொலை செய்யப்பட்டவரின் மனைவி தெரிவித்தார். 

அதனை அடுத்து தாயையும் மகனையும் கைது செய்த பொலிஸார் , பதுளை நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

No comments