Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் மணற்காட்டில் கைது


கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல இருந்த 12 பேரும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க இடம் கொடுத்திருந்த வீட்டு உரிமையாளரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

8 ஆண்களும் 4 பெண்களுமே சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்று குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க அனுமதித்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர்கள் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , அவுஸ்ரேலியா செல்வதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


No comments