டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஜூலை 13 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் மற்றும் 29 முதல் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 15 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஒரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments