யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சத்தியரூபன் துவாரகன் தெரிவுசெய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன 2022ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இன்றையதினம் யாழ்ப்பாண பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளத்தின் தலைவராக நல்லூர் இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக சத்தியரூபன் துவாகரன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளர்களாக கிருசாந் மற்றும் பிரியாவும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது யாழ் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் சிறிமேனன் வினோதினி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.கிருபைராஜா மற்றும் இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தர்கள் இளைஞர் சம்மேளனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments