Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

டீசல் வாகனத்திற்கு பெட்ரோல் பெற முயன்றவர்கள் கைது


பண்டாரகம பகுதியில் டீசல் வாகனத்தை பெட்ரோல் வாகனம் போன்று மாற்றம் செய்து பெட்ரோல் பெற முற்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

பண்டாரவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெட்ரோல் பெறுவதற்காக வரிசையில் "கப்" ரக வாகனங்கள் இரண்டு நின்றுள்ளன. 

குறித்த இரு வாகனங்களும் டீசலில் இயங்கும் தன்மையை கொண்டவை என்பதனை அங்கிருந்தவர்கள் அவதானித்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

அதனை அடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து குறித்த இரு வாகனத்தையும் சோதனையிட்ட போது , வாகனத்தின் எரிபொருள் டாங், பெட்ரோல் டாங்காக மாற்றப்பட்டுள்ளது. 

வாகனத்தின் இயந்திரத்திற்கு பிறிதொரு பிளாஸ்டிக் கான் ஊடாக டீசல் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

அதேவேளை டீசல் வாகனத்திற்கு என இருந்த வாகன இலக்க தகட்டினையும் மாற்றி அதனை பெட்ரோல் வாகனம் போன்று வெளி தோற்றத்திற்கு காட்டியுள்ளனர். 

No comments