Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு நீங்குமாம்!


எதிர்வரும் 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.

நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுயை பெற்றுக் கொள்வதற்காக குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனத்தில் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

இவ்வாறு கொள்வனவு செய்யவுள்ள எரிவாயு தொகையின் முழு பெறுமதி 90 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதற்காக உலக வங்கியிடம் இருந்து 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதி 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லிட்டோ எரிவாயு நிறுவனத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கூறுகையில்,

ஜூலை மாதம் 06 ஆம் திகதி 3,700 மெட்ரிக் தொன் ஏற்றிய முதலாவது எரிவாயு கப்பல் வருகிறது. ஜூலை 10 ஆம் திகதி 3,700 மெட்ரிக் தொன் ஏற்றிய மற்றுமொரு கப்பல் வருகிறது. அவற்றுக் தேவையான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் சில கப்பல்கள் ஜூலை 16,20,22,24,27 மற்றும் 31 ஆம் திகதிகளில் வரவுள்ளன. ஜூலை 31 ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள லிட்ரோ நிறுவனத்திற்கு முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments