Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நுணாவிலில் இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகளுக்கும் J/288 முதல் J/302 வரையிலான கிராம மக்களுக்கும் எரிபொருள் விநியோகம்


யாழ்.மாவட்ட சட்டத்தரணிகளுக்கும்,தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள J/288 முதல் J/302 வரையான கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி நுணாவில் ஐ.ஓ.சி யினர் எடுத்துள்ளனர். 

அது தொடர்பில் நுணாவில்ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வை. சிவராசா தெரிவிக்கையில், 

தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள J/288 முதல் J/302 வரையான கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

அதற்கு அமைவாக வாகன இலக்கத்தின் கடைசி இலக்கம்  6,7,8,9 ஆகிய  வாகனங்களுக்கு பெட்ரோல்  விநியோகிக்கப்படவுள்ளது.

எனவே பெட்ரோல் பெற வருவோர் தமது கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்துவதற்காக குடும்ப அட்டை அல்லது எரிபொருள் நிரப்பு அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும். அதனை பார்த்து உறுதிப்படுத்தியே பெட்ரோல் விநியோகிக்கப்படும். 

எனவே ஏனைய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த   வாடிக்கையாளர்கள் வீண் சிரமத்தையும் ஏமாற்றத்தையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். 

ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் சுழற்சி முறையில் எரிபொருள் வழங்கப்படும்.

அதேவேளை யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த வாகன பின்னிலக்கங்களைக் கொண்ட சட்டத்தரணிகளும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். 

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெட்ரோல் வழங்கவுள்ள ஒழுங்கு , 

 J/288 - 09.00 am  to   09.30 am.  J/289 - 09.30 am  to 10.00 am  J/290  - 10.00 am  to  10 30am  J/291 - 10.30 am  to  11.00 am. J/292 - 11.00 am  to  11.30 am  J/293 -11.30 am  to 12.00 pm J/294  - 12.30 pm  to  01.00pm  J295 -  01.30 pm to  02.00 pm  J/296 - 02.00 pm to 02.30 pm  J/297  - 02.30 pm to 03.00 pm  J/298  - 03.00 pm to 03.15 pm  J/299  - 03.15 pm  to  03.30 pm  J/300 - 03.45 pm to  03.45 pm    J/301 -03.45 pm  to  04.00 pm  J/302  -  04.oo pm  to  04.30 pm

No comments