ஹட்டன் – எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 07 வீடுகள் சேதமடைந்துள்ளன.
20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments