Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மகன் இயக்கிய உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கி தந்தை படுகாயம்!


உழவு இயந்திரத்தின் கீழ் தந்தை உறங்கிக்கொண்டு இருப்பதனை அவதானிக்காது மகன் உழவு இயந்திரத்தை இயக்கியமையால் தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

உழவு இயந்திர பெட்டியின் கீழ் தந்தை படுத்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதனை அவதானிக்காது மகன் உழவு இயந்திரத்தை இயக்கி அதனை வெளியில் எடுத்த போது , உழவு இயந்திர சில் கீழே படுத்திருந்த தந்தை மீது ஏறியுள்ளது. 

அதில் படுகாயமடைந்த தந்தையை மீட்டு மகன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

No comments