வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர்களின் வாடிக்கு விஷமிகள் தீ வைத்தமையால் வாடியில் இருந்த சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான வலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , முற்பகை காரணமாகவே வாடிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments