Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னார் மற்றும் நானாட்டானில் சத்துணவு வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!


மன்னார் மற்றும் நானாட்டான்  பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட போசாக்குக் குறைந்த குழந்தைகளுக்கன சத்துணவு வழங்கல் ஆரம்ப நிகழ்வு கடந்த வியாழக்கிழமை மன்னாரிலும், முருங்கனிலும் நடைபெற்றது.

மன்னார் நலன்புரிச்சங்கம் (UK) லண்டன்  அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது இந்நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மன்னார் நலன்புரி சங்கம் (UK) லன்டன் தலைவர் ஜேம்ஸ் பத்தினாதன்(விமல் ), பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் Dr.வினோதன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான Dr.ரூபன் மற்றும் Dr.றோய், மன்னார்மாவட்ட நலன்புரிச்சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.றெஜி ஆகியோர் கலந்துகொண்டு இச்சத்துணவு வழங்கும் நிகழ்வினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

  இச்சத்துணவுத்திட்டத்தினை நானாட்டான் பிரதேசத்துக்கு மட்டுமல்லாமல் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக வழங்குவதற்குரிய முயற்சியினையும்  ஆரம்பநிகழ்வினையும் நானாட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.ரூபன் அவர்கள் மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது  






No comments