Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நீதிமன்றம் மற்றும் மின்சார சபை ஊழியர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நுணாவில் ஐஓசியில் பெற்றோல்!


யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சாவகச்சேரி மின்சார சபை ஊழியர்கள், தென்மராட்சி கல்வி வலய  முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தென்மராட்சியில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் ஆகியவற்றுக்கு பெற்றோல்  வழங்கப்பட உள்ளது.

நாளை 3 ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சாவகச்சேரி மின்சார சபை ஊழியர்கள், தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பெற்றோல் வழங்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் 4ஆம் திகதி வியாழக்கிழமை தென்மராட்சி பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் வழங்கப்படவுள்ளது.

அனைவருக்கும் எரிபொருளை பெற்றுக் கொடுக்கும் முகமாக சுழற்சி முறையில் இவ்வாறான வழங்கல் முறைமையை மேற்கொண்டு வருவதாக நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் சாதாரண பொது மக்களும் ஒழுங்கு முறையில் எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments