மனைவியின் அடியில் இருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் தினமும் சண்டை வந்துள்ளது.
மனைவிக்கு கோபம் தலைக்கேறினால் கணவனை கடுமையாக தாங்குவார். ஆரம்பத்தில் அடியை தாங்கிய ராம் பிரவேஷ், காலம் செல்லச் செல்ல அடி தாங்க முடியாமல், வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த அவர் மனைவிக்கு பயந்து பனை மரத்தின் மீது வீடு போன்ற அமைப்பை கட்டி வாழ்ந்து வருகிறார்.
பனை மர வீட்டில் அவர் இருக்கும் சமயத்தில் அவரது குடும்பத்தினர் உணவுப் பொருட்களை கயிற்றில் கட்டி அனுப்புகிறாகள். சுமார் ஒரு மாதமாக இவ்வாறு அவர் பனைமரத்தில் வாழ்ந்து வருகிறார்.
No comments