Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்!


நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். 

நீர்கொழும்பு நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் நீதிமன்ற அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்த துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை கடந்த 4ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றில் குற்றவாளி கூண்டில் நின்றவரை இலக்கு வைத்து, நீதிமன்றினுள் நுழைந்த துப்பாக்கி தாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments