Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் சூழலில் மதுபோதையில் பணியில் ஈடுபட்ட சுத்திகரிப்பு பணியாளர் - உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளரை தாக்கவும் முயற்சி!


நல்லூர் ஆலய சூழலில் மதுபோதையில் சுத்திகரிப்பு பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளருடன் அநாகரிகமாக நடந்த கொண்டதுடன் அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார். 

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை  துப்பரவு பணியில் ஈடுபட்ட  ஊழியர் மதுபோதையில் நிற்பதை அவதானித்த யாழ் மாநகர சபை உறுப்பினர், குறித்த துப்புரவு பணியாளரை நாளைய தினம் வந்து கடமையில் ஈடுபடுமாறும் மதுபோதையில் இருந்து பணியில் ஈடுபடவேண்டாம் எனவும் கூறுமாறு  மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தினார்.

அதனை அடுத்து குறித்த பணியாளர், பணியில் ஈடுபட முடியாது என மேற்பார்வையாளர் கூறிய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பணியாளர் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளரை அச்சுறுத்தி, தாக்கவும் முற்பட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள யாழ் மாநகர சபை குறித்த பணியாளரை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments