நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை - போதீஸ்புர பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், திருகோணமலை மகமாயபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.பி.பிரதீப் கெலும் (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டதாகவும், பின்னர் நள்ளிரவு வேலையில் இவ்வாறு சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments