கேகாலை, களுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்படுகின்றது .
குறித்த அலுவலகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும்சகுந்தலா வீரசிங்க (வயது 38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments