பிறந்து 51 நாட்களே ஆன குழந்தை ஒன்று குழந்தைகள் காப்பகம் அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை அம்பேகொட சிறிசங்கபோ குழந்தைகள் காப்பக வாகன தரிப்பிடத்தில் குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையை தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளது.
அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரவில் ஆண் ஒருவர் வந்து குழந்தையை விட்டுச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments