யாழ்ப்பாணம் - நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களது சேவைகளைப் பாராட்டி 1953 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மாகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்கள் எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி உரையினை ஆற்றினார்.
No comments