முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வர விரும்பினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்
எனினும், முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை. இதுவரை கட்சியில் அப்படியொரு விடயம் நடப்பதாக தெரியவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ அல்லது வேறு எவருமோ இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை. அவ்வாறு அவர் நாடாளுமன்றத்துக்கு வர விரும்பினால், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என குறிப்பிட்டுள்ளார்
No comments