Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தொண்டைமானாற்றில் முதலைகள் - சந்நிதியான் பக்தர்களை அவதானமாக நீராடுமாறு அறிவுறுத்தல்!


தொண்டைமானாறு ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளமையால் , செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வருகை தந்து ஆற்றில் நீராடுவோர்களை அவதானமாக நீராடுமாறு சந்நிதியான்  நிர்வாகம் கோரியுள்ளது. 

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது. 

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து ஆற்றில் நீராடி முருகனை வழிபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளமையால் , ஆற்றில் போடப்பட்டுள்ள மிதவைகளை தாண்டி , ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராட வேண்டாம் எனவும் ,  நீராடும் போது உதவிக்கு ஆட்களை அழைத்து சென்று , ஆற்றினை மிக அவதானமாக கண்காணித்து நீராடுமாறு கோரியுள்ளனர். 

No comments