Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, May 30

Pages

Breaking News

வேலை தருவதாக பாலியல் இலஞ்சம் கோரிய யாழ்.மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது!


அரசாங்க வேலை பெற்றுத்தருவதாக கூறி இளம் பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கட்சி ஒன்றின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறும் நபரும் அவருடைய செயலாளரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை புறக்கோட்டை - மிதக்கும் சந்தை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கைது செய்ததாக  இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் நீதிமன்றில் சந்தேக நபர்களை முற்படுத்தினர். 

அதனை அடுத்து, இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன  கெக்குனவல உத்தரவிட்டார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கட்சி ஒன்றின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் நபரும், அவரது செயலாளர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த  ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

முறைப்பாட்டாளரான பெண்ணிடம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், பாலியல் இலஞ்சமும் சந்தேக நபர்களால் கோரப்பட்டுள்ளதாகவும், அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களைக் கைது செய்ததாகவும்  இலஞ்ச ஊழல் ஆணைக் குழு  குழுவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.