Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மேலும் 06 பேர் தமிழகம் சென்றுள்ளனர்!


இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தமிழகத்துக்கு சென்றுள்ளனர். 

மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 06 பேர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையில் இருந்து பைபர் படகொன்றில் புறப்பட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை காலை தனுஷ் கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் இறங்கியுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மண்டபம் கடலோர பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு ராமேஸ்வரம் கடலோர பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 181 பேர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments