Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பும் மரக்கன்று வழங்கலும்!


ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய வினாடி வினா பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. 

அதேவேளை குறித்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன் தரும் மா மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

பாடசாலை அதிபர் திரு தி.வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருத்தினராக வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் விவசாய பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி. வேழினி பாலேந்திராவும் , சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்  ப.அருந்தவம் மற்றும் எதிர்காலத்தை நோக்கியசுற்று சூழல் கழக செயலாளர் ம.சசிகரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும், சான்றிதழ்களையும், மாங்கன்றுகளையும்  வழங்கி வைத்தனர்.









No comments